Monday, 13 February 2017

பானை உடைத்தல் (உறியடித்தல்) -PONGAL EVENTS (2017)- PAANAI UDAITHAL

பானை உடைத்தல் (உறியடித்தல்) 
வருடம்தோறும்  பொங்கல் விழாவின் இறுதி நாள்,  மாலையில் நடைபெறும் பானை உடைத்தல் (உறியடித்தல்) ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கும். ஊரில் சிறப்பாக அன்று முதல் வாலிபர்களிள் வீர விளையாட்டாக இது அமைத்திருகிறது. ஊரில் மூன்று நாட்கள் பொங்கல் விழா சிறப்பாக முடிவடைந்தது என்ற "கண் பேர்" போக த்ரிஷ்டிக்கு செய்யப்படும் ஒரு "வீர" விளையாட்டு, முதல் நாள் பொங்கல் (சர்க்கரை பாயசம், பச்சரிசி பொங்கல்) விட்ட பானையில் தண்ணீருடன் சுண்ணாம்பு, மஞ்சள் சேர்த்து வரும் செந்நிற நீருக்குள் பூக்கள், வேப்ப இலை சேர்த்து கரைசல் செய்து, நன்றாக வடத்தினால் இறுக்க கட்டி ஊருக்கு வெளியே கட்டி வைப்பார்கள். இந்த "கண் பேர் " பானையை தயார் செய்வது ஒரு தனி குரூப்.  



பானை உடைத்தல் என்பது எளிதான விஷயம் அல்ல, ஒரு 200 மீட்டர் தூரத்துக்கு முன்னர் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் கண்கள் பூவரசு இலையால் மறைத்து பின்னர் துவர்த்தால்  (தலை முண்டு) இறுக்க கட்டப்படும். இருளை தவிர ஏதும் தெரியாது. கையில் நீளமான கம்புடன்,  இருள் சூழ்ந்த கண்களோடு பானை  கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு வீரர்களை அழைத்து வந்து, அவர்களை படாத, பாடு படுத்தி, பானையை உடைக்க வைப்பது நம் மக்களின் திறமை. 



இந்த ஆண்டும் போட்டியில் இளம் சிங்கங்கள் களம் இறங்கின அன்பரசு, செந்தில் ஆனந்த், தனசேகர், சுனில் ஆகியோர், சுற்றி பார்த்த நம் மக்கள் ஏய்,,, அன்னா,, பாரு,,அடி.. கொஞ்சம் தள்ளி போ..  என்ற வசனங்கள் முழங்க போட்டி வெகு ஜோராய் நடந்தது. வீரர்களை உசுப்பேற்ற பானையில் இருந்து சிந்தும் தண்ணீர் போல் அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி போட்டியை விறுவிறுப்பாகினர் பாஸ் ராஜேஷ் கண்ணன்.  










நான்கு பேர் கொண்ட போட்டியில் தம்பி செந்தில் ஆனந்த்தின் கை  வீச்சில் பானை உடைந்தது, . இந்த வருட 2017 பானை உடைத்தல் போட்டியின் நாயகன் ஆனான்.



Group Selfie 



Group Selfie 

Group Selfie 

Group Selfie 

Group Selfie 
தொகுப்பு:

கண்ணன்

திறன்பேசி ஒளிப்படங்கள்

ராகுல் நாகராஜன்
ராஜேஷிபு
செந்தில் ஆனந்த்
மதன் ஐ
அன்பரசு
வெங்கடேஷ்
முஜிபு சதீஸ்

Friday, 27 January 2017

PONGAL SPECIAL EVENT- MARU VEDA POTTI-2017

பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி- மாறுவேட போட்டி-2017-PONGAL SPECIAL EVENT- MARU VEDA POTTI-2017

வருடா வருடம் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், மற்றும் குழந்தைகளால் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சியாக மாறுவேட போட்டி அமைவதுண்டு. தற் போது வயதானவர்கள் கூட, தனது இளமைக்காலத்தில் மாறு வேஷம் போட்டதை நினைவு கூறுவர். எமக்கு தெரிந்த வகையில் பெரும்பாலும் பிச்சைக்காரன், கோட்டர் கோவிந்தன் (குடிகாரன்), பெண் வேடம், குறவன் குறத்தி, கிழவர் வேடம் போன்றவை அடிக்கடி நிகழ்பவை, எம் நினைவில் "பல்கா பாபு" உடல் முழுதும் வேப்ப மரக்குழைகளை கட்டி வந்து , மரங்களை காப்போம் என  வேடம் போட்டது நிறையபேருக்கு மறக்காதது, சின்னத்துரை "சேது" பட விக்ரம் வேடத்தில் கழுத்தில், காலில் சங்கிலியோடு, அபி..அபி.. அம்மா, அவளை கொஞ்சம் கூப்பிடுங்கம்மா... என்று பேசிய வசனம் காதில் கேட்கிறது, மதன் மாம்ஸ்  "அவன் இவன் " பாடலுக்கு பெண் வேடம் போட்டு ஆடிய. ஹே.. ஹேய்.. அட டிய்யா.. டிய்யா.. டோலே.. பாடல் கண் முன்னாடி நிற்கிறது. பாத்திமா கார்த்தியின் அந்நியன் வேடம், பாட்ஷா பாய் செல்வகுமாரின் போக்கே மேன், சில்வர் மேன் வேடம், மாப்பு கார்த்தியின் பாட்ஷா, அண்ணாமலை, அன்பேசிவம் கமல் வேடம், தம்பி சுனிலின் மறக்கமுடிய சாமி வேடம், பெண் வேடம், செந்தில், மாயாண்டி சுரேஷின் அகோரி வேடம், வெங்கி மற்றும் மாம்ஸ் ராஜாவின் கர்ணன் வேடம் மறக்காதது. அந்தவகையில் இந்த வருட (2017) மாறுவேட போட்டியின் ஒளிப்படங்கள்.  


பப்பு (தருஷ் தேவ்) குன்றுதோறாடும் குமரவேலன் வேடம். அன்பரசுவுடன் தம்மி 

விடுதலைக்கவி பாரதி- எபின் பிரத்தியுஸ் 

உள்ளங்களை கொள்ளை கொண்ட ரெமோ  REMO (Regina Mothwani)

 ரெமோ  REMO (Regina Mothwani) ஸிஸ்டருடன் தம்மி, முஜிபு சதீஸ்

ரெமோ  REMO (Regina Mothwani) ஸிஸ்டருடன் தம்மி, முஜிபு சதீஸ் 


ரெமோ  REMO (Regina Mothwani) ஸிஸ்டருடன் தம்மி, கவிதை குண்டர். ராஜசிபு 
மேடைக்கு வரும்முன்னே










ஊர் காக்கும் சுடலை மாட சாமிகள் உடன் கவின் 





சிறப்பு தோற்றம் வாரணாசி அகோரி 

அகோரி, ஊய்க்கட்டு சுடலை யுடன் தம்மி மதன் 

மறக்க முடியாத 

சிறப்பு விருந்தினர் ....நா...கி....னி ... யுடன் ...





நா...கி....னி யுடன் தம்மி ஏ வி கார்த்தி 

நா...கி....னி யுடன் தம்மி ஏ வி கார்த்தி  மற்றும் உய்க்காட்டு சுடலை மற்றும் மயான சுடலை 
நா...கி....னி யுடன் தம்மி. ஏ வி கார்த்தி, கவின், மதன்,  உய்க்காட்டு சுடலை, அகோரி  மற்றும் மயான சுடலை 

நா...கி....னி யுடன் ஒரு கூட்டு தம்மி.  உய்க்காட்டு சுடலை மற்றும் மயான சுடலை அகோரி, கவின்


இந் நிகழ்வை  , குழந்தைகள், பெரியவர்கள், பெண்மணிகள் 
பார்த்து ரசித்து, கைகளை தட்டி, வயிறு குலுங்க சிரித்து, மன மகிழ்வோடு விடை பெற்றனர் .


தொகுப்பு. கண்ணன் 
திறன்பேசி ஒளிப்படங்கள் . 
1. முஜிபு சதிஷ் 
2. கவிதை. ராஜேஷிபு 
3. ஐ. மதன் 
4. எஸ் . அன்பரசு
5. ராகுல் நாகராஜன் 
6. எஸ். ராஜா 

Wednesday, 25 January 2017

பொங்கல் விழா - மாபெரும் கபடி நிகழ்வு - Pongal Kabaadi 2017

பொங்கல் விழா - மாபெரும் கபடி நிகழ்வு 

2017 இல் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நமது ஊர் கபடி போட்டி(15-01-2017) இரண்டாம் நாள் நடைபெற்றது 
திருமணம் ஆன ஆண்களுக்கும், திருமணம் முடியாத கட்டிளம் காளைகளுக்கும் போட்டி நடை பெற்றது 
திருமணம் ஆன அணியின் தலைவராக AV. கார்த்தியும், திருமணம் ஆகாத அணியின் தலைவராக S. ஸ்ரீ நிவாசனும் பங்கெடுத்தனர். போட்டியை பெரியப்பா P. ரெத்தினமணி துவங்கி வைத்தார்.
போட்டியின் நடுவர்களாக திரு.N. ராஜ்குமார் (Ex.Army ) மற்றும்    M.கார்த்திக்குமார் ஆகியோர் சிறப்பித்தனர். மன்ற தலைவர் S.ராஜா மதிப்பெண் எழுதினார். பலத்த ஆரவாரத்தோடு, குழந்தைகளோடு ஊர் மக்களும்,  மகிழ்ச்சியோடு போட்டியை கண்டுகளித்தனர்.

படங்கள் இதோ..


போட்டியின் துவக்கம், ஸ்ரீ நிவாஸன், பெரியப்பா ரெத்தினமணி, ராஜசிபு, வெங்கி, ராம்ஸ்  

தினேஷ் அதிரடி Ride 

விளையாட்டை கண்டு மகிழ்ந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர் 

குமார் அண்ணனின் Speed  Ride. நடுவர்கள் கார்த்திக்குமார் மற்றும் ராணுவ வீரர் ராஜ்குமார் 

சுரேஷின் கள ஆட்டம் 

பாஸ் ராஜேஷ் கண்ணனின் புயல் வேக Ride 

வளச்சு பிடிச்சீட்டியளே .. மக்கா.....

எங்களை ஜெயிக்க முடியாது..!
விடுவோமா நாங்கல்லாம்......அப்பவே அப்டி..

ராம்ஸ் பிடியிலிருந்து பாயிண்ட் எடுக்கும் தினேஷின் அதிரடி 

முஜுபு சதீஷின் ஒரு ரைடு 

சீனிவாசன் இந்த உடும்பு பிடியிலிருந்து தப்ப முடியுமா ?

அனைவரும் ரசித்த ஒரு சூப்பர் ரைட் 


அதிரடி சுரேஷ் 3 வெற்றிப்புள்ளிகள் 
போட்டியின் இறுதியில் திருமணம் ஆகாத கட்டிளம் காளைகள் அணி 20 வெற்றிப்புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியது. 

வெற்றி வாகை சூடிய மகிழ்ச்சியில் 

வெல்லட்டும் இந்த இளைஞர் படை 


ஒளிப்படங்கள். கண்ணன் 
திறன் பேசி : தினேஷ்